top of page

மருத்துவ உலகின் ராணி சோற்றுக்கற்றாழை!.

       

மருத்துவக் குணங்கள்

 

1.       கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறைகழுவி சுத்தம் செய்து,
    தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உங்கள்இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும்.

 

2.             உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.

 

3.         கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வரஉடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால்தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள்மறைந்து போகும்.

 

4.          இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால்முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும்.

 

5.         கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய்எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதைதலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்குசெழித்து வளரும்   

 

6.          .காலை வெறும் வயிற்றில் சிறு துண்டுகள் தினம்சாப்பிட்டு வர உடலில் சத்து கூடும்; உடல்பருக்காமலே.பலகீனம் மறையும்   தாதுவிருத்தி ஏற்படும்.பிள்ளைப்பேறு வேண்டுபவர்கள்கூட இதை சாப்பிட்டுவந்தால் நாளடைவில் நல்ல முன்னேற்றம் பெறலாம்;
 
7.     சோற்றுக்கற்றாழை+வெள்ளைப்பூண்டு+பனங்கற்கண்டு+எள் எண்ணெய் ஆகியவற்றை கலந்து [தோராயமானஅளவுகளில்] காய்ச்சி வடித்து எண்ணெயை குடல்; வயிறுதொடர்பான எல்லா நோய்களையும் குணப்படுத்தும் .
 
.
8.     கோடைக்காலத்தில் உருவாகக் கூடிய நீர்கடுப்பு, நீர்தாரைஎரிச்சல், மாதவிடாய் கோளாறுகள், உடல் வெப்பம், உடல்காந்தல் போன்ற பாதிப்புகளுக்கு, சோற்றுக் கற்றாழைஉள்ள நுங்கு (சோறு) போன்ற சதையை எடுத்து சுத்தமானநீரில் அலசிக் கொள்ள வேண்டும். பிறகு அதற்குச் சமமானஅளவில் பனங்கற்கண்டினை அத்துடன் சேர்த்து காலை,மாலை இருவேளைகளிலும் உண்டு வரவேண்டும்.இதனால் உடல் உஷ்ணமும், எரிச்சலும் குறையும்.

 

9.     வெயில் காலத்தில் சிலருக்கு கண்களில் எரிச்சல்உண்டாகி, கண்கள் சிவந்து விடும். அப்போது,கற்றாழையின் ஒரு துண்டை எடுத்து அதன் நுங்குப் பகுதிவெளியே தெரியும்படி இரண்டாகப் பிளந்து, கண்களை மூடிகண்களின் மீது அந்தத் கற்றாழை துண்டைவைத்துக்கொண்டு சற்று நேரம் அப்படியே படுத்திருக்கவேண்டும். இப்போது கண் எரிச்சல், குறைவதோடு, சிவந்தநிறமும் மறைந்து விடும்.

 

10.       இதை இரவு நேரங்களில் தூங்குவதற்குமுன் செய்துவந்தால் நல்ல உறக்கம் வருவதோடு, உடலுக்கு பலநன்மைகளும் கிடைக்கும்.

 

11.    . சிலருக்கு தூங்கி எழுந்ததும் பாதத்தின் அடியில்நெருப்பை மிதித்ததுபோல, எரிச்சலாக இருக்கும்.இதைப்போக்க இரவு படுக்கும்முன் கற்றாழையின்நுங்குபோன்ற சோற்றை பாதத்தின் அடியில் தடவிக்கொண்டு படுக்கலாம். பாத எரிச்சல் குறைவதோடு, பாதவெடிப்புகளும் குணமாகும்.

 

12.   சோற்றுக் கற்றாழையில் செய்த தைலத்தை தலைக்குத்தேய்த்துக் குளிப்பதால் உடல் சூடும், எரிச்சலும் குறைந்துஉடல் குளிர்ச்சியடையும், உடலில் எந்தப் பிரச்சினையும்இல்லாதவர்கள் இந்த எண்ணெய்யை தினமும் தலைக்குத்தடவி வரலாம்.

 

13.  . வாரம் இருமுறை இந்த எண்ணெய்யை உடலுக்குத்தேய்த்து குளிப்பதால் உடலுக்கு குளிர்ச்சியைஏற்படுவதோடு, உடல் வனப்பும் ஏற்படும். இந்த சோற்றுக்கற்றாழைத் தைலம் அல்லது எண்ணெய் நாம் வீட்டிலேயேதயாரிக்கலாம்.

 

14.  சோற்றுக் கற்றாழையின் சோறு 7முறை கழுவியது 1 கிலோ,விளக்கெண்ணெய் 1 கிலோ, பனங்கற்கண்டு அரை கிலோ,வெள்ளை வெங்காயச்சாறு அரை கிலோ ஆகியவற்றைக்கலந்து சிறு‌ந்தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டிஇரண்டுவேளை 15 மில்லியளவு குடித்துவர மந்தம்,வயிற்று வலி, பசியின்மை, குன்மக் கட்டி, ரணம்,புளியேப்பம், பொருமல் ஆகியவை குணமாகும். நீடித்தமலச்சிக்கலைப் போக்குவதில் மிகவும் சிறப்பானது.

 

15.    செரிமான சக்தியை அதிகரிக்கும். பசியை உண்டாக்கும்.

 

 

16.  இதும‌ட்டு‌ம் அ‌ல்லாம‌ல் பெரும் ஏப்பம், பசியின்மை,குன்மம், தண்டு வலி, வயிற்றுப் பொருமல், அடிவயிறுவீக்கம், மலச்சிக்கல், நரம்புச் சூடு தணியும்.

 

17.  இதே எண்ணெயை 5 மில்லி அளவு (1 தேக்கரண்டி) 2 வேளைகுடித்து காரம், புளி உள்ள உணவு வகைகளை நீக்கிசாப்பிட்டு வர மேக நோய் பலவீனமாகும்.

 

18.  எரிச்சல், நீர்க்கசியும் கிரந்தி, அரிப்பு, தினவு, மஞ்சள் மற்றும்சிவப்பு நிறத்தில் நீர் ஒழுகுதல், தாது இழப்பு, அரையாப்பு,தொடைக்கட்டி, அக மற்றும் புற உறுப்புகளில் உள்ளஇரணங்கள், சீழ் வடிதல், மலச்சிக்கல், குணமாகும்.வெள்ளை வெட்டை நோய்கள் ஆகியன பூரணமாகக்குணமாகும். மருந்து சாப்பிடும் காலங்களில் காரத்தையும்,புளியையும் சேர்க்காமல் உணவு உட்கொள்ள வேண்டும்.

 

19.  வைட்டமின் சத்துகள் குறைவதால் மூட்டுகளுக்குஇடையே உள்ள கூழ் போன்ற திரவம் குறைகிறது.இதனால்மூட்டுவலி ஏற்படுகிறது. இவற்றை சரியான நேரத்தில் சரிசெய்யாவிட்டால் மூட்டு வலி என்பது குணப்படுத்தமுடியாத ஒரு நோயாக மாறி விடக்கூடும்.
 

மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற "அலோசன் ஹெல்த்டிரிங்க்' உதவும்.
 
     இதில் உள்ள ஊட்டச் சத்துகள் நிறைந்த தண்ணீர் உடலில்குறைவாக உள்ள நீர்ச் சத்தை அதிகப்படுத்தி மூட்டுகள்சரியாக இயங்குவதற்குத் தேவையான கூழ் போன்றதிரவத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது. மனித உடலில்மடிந்து போன செல்களை மீண்டும் உயிர்ப்பித்து எல்லாவகையான மூட்டு வலிகளுக்கும் இந்த பானம் நிவாரணம்அளிக்கிறது.
     

 

20)  இன்றைய அனைத்து அழகுசாதனப் பொருட்களின்     தயாரிப்பிலும் தவறாது இடம் பெறுவது கற்றாழைதான். இதன்சாறு சருமத்தின் ஈரப்பதத்தை சமன் செய்வதுடன்  சர்மநோய்களையும் குணப்படுத்துகிறது.
 
21) முகத்திலுள்ள கரும்புள்ளிகள், தழும்புகள், வெயில் பாதிப்புகள்உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும், சிறிதுகற்றாழைச் சாற்றைத் தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும். இதன் சாற்றை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து  காலையில்வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவுபெறும்.
 
   

22)தீக்காயங்களுக்கும் ‘உடனடி டாக்டர்’ கற்றாழைச் சாறுதான்.
 

23) நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாககற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பிசத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு. சருமத்திலுள்ளகொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன்கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம்வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.
     

 

viber image 2019-04-20 , 14.46.29.jpg


      மேலும் இந்த எண்ணெய் பெண்களின் மாதாந்திர ருதுவைஒழுங்குபடுத்தும். கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்.


சோற்றுக் கற்றாழை மடல் சுத்தம் செய்து எடுத்து, இதில் சிறிதுபடிக்காரத்தூளைத் தூவினால் நீர்த்து தண்ணீராகிவிடும். இதில்வெண்ணெய், கற்கண்டு, வால் மிளகுத் தூள் சேர்த்து,சாப்பிட்டால் மூத்திரக் கிரிச்சரம், மேக நோயால் ஏற்பட்டவெட்ட நோய் நீங்கிவிடும்.

 

கழுவிச் சுத்தம் செய்தசோற்றுக்கற்றாழை ஒரு கப் சேகரம் செய்து  கொண்டு, இதில்சிறிய வெங்காயம் ஒரு கப் நறுக்கிச் சேர்த்துவிளக்கெண்ணெய் 300 கிராம், பனங்கற்கண்டு 300 கிராம் இவையாவையும் ஒன்று சேர்த்து  அடுப்பில் வைத்து சிறு தீயாகலேகிய பதம் வரும் வரை எரித்து எடுத்துக்கொண்டு காலை,மாலை, ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் அனைத்துவகையான வயிற்று வலியும், வயிற்றுப் புண்களும்குணமாகும்.

 

சிறுநீர் எளிதில் வெளியேற....கழுவி எடுத்தசோற்றுக் கற்றாழையில் ஒரு மடல் அளவு கற்றாழைத்துண்டுகளை நீர் ஆகாரத்தில் கலந்து குடிக்க வேண்டும். மடல்துண்டுகள் ஐந்து தேக்கரண்டிக்குக் குறையக் கூடாது இதை,காலையில் ஒருவேளை சாப்பிட வேண்டும். மூன்று நாள்உபயோகத்தில் சிறுநீரில் இரத்தம் கலந்து வருதல் நின்றுவிடும். இதே முறையில், மூன்று தினங்கள் சாப்பிட்டால்நீர்த்தாரை எரிச்சல் குணமாகும். கழுவிச் சுத்தம் செய்தகற்றாழைத் துண்டு ஒரு கப் எடுததுக் கொண்டு, இதில் சின்னவெங்காயம் சுட்டுப்பொடியாக்கிய ஐந்து வெங்காயத்துக்குக்குறையாமல் சேர்த்துக் கொண்டு, இந்த கற்றாழைச் சோற்றில்கலந்து, கடுக்காய் பொடிகள் மூன்று கடுக்காயில் சேகரித்து,எல்லாவற்றையும் ஒன்றாக்கி சிறிது தண்ணீர் விட்டு மூடிவத்தால், கால் மணி நேரத்தில் நீர்த்து தண்ணீராகிவிடும்.இந்தத் தண்ணீரை வடிகட்டிச் சாப்பிட்டால் அரை மணிநேரத்தில் சிறுநீர்க்கட்டு நீங்கிவிடும். தாராளமாக சிறுநீர்வெளியேறிவிடும்.

புண்கள் ஆற....கழுவி எடுத்த கற்றாழைச்சோறு 25 - 50 கிராம்பசும் பாலில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் பத்துதினங்களில் மூலச் சூடு தணியும். சொறி, அரிப்பு நீங்கும்.விந்து உற்பத்தி அதிகரிக்கும் 


பெண்களின் வெள்ளை நோய் குணமாக....பெரிய கற்றாழைமடலை நீளவாக்கில் கீ

© 2019 by Name of Site. Proudly created with Wix.com

bottom of page